Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (40)

ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும். நடப்பிலும் இல்லாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்யமுடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்டவிரோதம்” என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள ‘தீண்டாமை’ (Untouchablility) என்பதற்குப் பதிலாக ‘ஜாதி’ (caste) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகனப்படுத்துவதாக அமைய வேண்டும்.

 -சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார்(1972)

No comments: