Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (50)

அண்ணல் அம்பேத்கரைப் பற்றித் தந்தை பெரியார்......

டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. இன்று மட்டுமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன். (விடுதலை 20.06.1972.)


பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். (விடுதலை 22.02.1959)


வடநாட்டில் இருக்கிற பேதத்தைப் பற்றி, இழிசாதித் தன்மையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அங்கு இந்த உணர்ச்சியைக் கிளப்புவதென்றால் கடினமான காரியமாகும். ஆனால், அங்கேயே 1927,1928 லேயே அம்பேத்கர் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசியிருக்கிறார். நாசிக்கில் கூடிய ஒரு மாநாட்டில் இராமாயணத்தைப் போட்டுக் கொளுத்தியிருக்கிறார். (விடுதலை 16.05.1952)


தோழர் அம்பேத்கர் இன்று போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக விளங்குகிறார். (விடுதலை 27.07.1946)


இந்தியா முழுவதிலும் அம்பேத்கர் போல படித்தவர், அறிவாளி, துணிவுள்ளவர், சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்தவர் யாருமே இல்லை. (விடுதலை 14.06.1973)

No comments: