Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (52)

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் நீதிக்கட்சி தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டது.

படத்தில் காணும் அரசாணை பனகல் அரசர் காலத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியலை அனுப்பும்போது பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களை அளிக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

[அரசாணை எண்.205, சட்டம்(கல்வி), நாள்: 11.02.1924]

இத்தகைய முயற்சி நீதிக்கட்சி தோல்வியடைந்த பின், சுயேட்சையான சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் பள்ளிக்கூடங்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டது. (குடிஅரசு, 02.11.1930).

No comments: