Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (76)

இராஜாஜி அரசின் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழக வரலாற்றின் முதல் மொழியுரிமைப் போரான இந்தி எதிர்ப்புப் போராட்டம் தந்தை பெரியாரால் 1938-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பெரியார் 05.12.1938 அன்று கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 22.05.1938 அன்று விடுதலையானார்.

தந்தை பெரியார் சிறையிலிருந்த போது, நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14 ஆம் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


No comments: