Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (58)

7.07.1950 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ' வகுப்புரிமை இட ஒதுக்கீடு' அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் சென்னைத் தீர்ப்பை உறுதி செய்தது.

 இத்தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் திருச்சியில் 03.12.1950 இல் வகுப்புரிமை மாநாடு கூட்டினார்.

தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரணமாக முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அரசியல் சட்டத்தில் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டது.

சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ செல்லாத தந்தை பெரியாரால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி உரிமை வழங்கப்பட்டது.

No comments: