Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (71)

28.2.1929 அன்று அருப்புக்கோட்டை அருகேயுள்ள சுக்கிலநத்தம் எனும் சிற்றூரில்தான் முதன் முதலாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் அரங்கேறியது. ஒரே திருமண மேடையில் 3 சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன. இதிலே இரண்டு திருமணங்களில் ஒரே கணவன்- இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள்; தந்தை பெரியார் முன்னின்று நடத்திய அத்திருமணத்தில் மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ஜெ.எஸ்.கண்ணப்பர்; பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


No comments: