Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (38)

நெருக்கடி நிலையின்போது, மற்ற இதழ்களைப் போல விடுதலை ஏடும் தணிக்கைக்கு உள்ளானது.

விடுதலையின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அம்முழக்கம் நீக்கப்பட்டால்தான் விடுதலையை அச்சிட முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இச்செய்தி, அப்போதைய விடுதலை ஆசிரியர் ஈ. வெ. ரா. மணியம்மையாரிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிவரை தணிக்கை அதிகாரியிடம் பேசியும், அதிகாரி ஒப்புக் கொள்ளாமல் போகவே ‘தமிழ்நாடு இந்திராவுக்கே என்று போட்டால்தான் வெளியிட அனுமதிப்பீர்கள் போலிருக்கிறது’ என்று கடுமையாகப் பேசினார், அமைதிக்குப் பேர்போன அன்னை மணியம்மையார்.

இந்நிகழ்வுக்குப் பிறகுதான், விடுதலை ஏட்டில் “வாழ்க பெரியார், வளர்க அவர் கொள்கை” எனும் முழக்கங்கள் அச்சிடப்பட்டு வெளிவரத் தொடங்கின.

No comments: