Friday, March 08, 2019

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை

#தந்தை பெரியார் #தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் #தமிழ்நாடு இருந்த நிலை...........
1.ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.
3.தங்க நகைகள் அணியக் கூடாது.
4.மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5.ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6.சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7.திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8.பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9.குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10.பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11.மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12.உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13.பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14.நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
..........இந்த நிகழ்வுகளெல்லாம் இன்று தமிழகத்தில் மாறியிருப்பதற்கு காரணம் யார்? '' தந்தை பெரியார்'' அல்லவா, இந்த நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏடுகள், 'குடி அரசு, ' புரட்சி', ' பகுத்தறிவு',போன்ற ஏடுகளே..........

No comments: