Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (61)

அரசு அலுவலர்கள் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று 1978-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண். 1134, கல்வித் துறை, நாள். 26.01.1978)

பின்னர், தமிழ்மொழியின் பயன்பாட்டினை செவ்வனே செயல்படுத்த உறுதுணையாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின் துணைகொண்டு 2008-இல் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அரசாணையும் வெளியிடப்பட்டது. (அரசாணை எண். 41, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை, நாள். 20.02.2008). அதன்படி,


தலைமைச் செயலகத் துறைகளில் அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.


சுற்றாணைக் குறிப்புகள் (Circulars) மற்றும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம் மற்றும் துறைத் தலைமை அலுவலகப் பயன்பாட்டிலுள்ள கணினிகள் அனைத்திலும் தமிழ் மென்பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.


துறைத் தலைமை அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் முடிந்த வரை தமிழிலேயே இருக்க ஆவன செய்ய வேண்டும். சான்றாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.


No comments: