Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (45)

17.03.1969 அன்று தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம், மத்திய-மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்.

இந்த அதிகாரப்பகிர்வு தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இதுபற்றி ஆராய நீதிபதி இராஜமன்னார் தலைமையில் டாக்டர்.ஏ.லட்சுமணசாமி முதலியார், பி.சந்திராரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய-மாநில உறவுகளும் அதனிடையே அதிகாரப்பகிர்வும் குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் இது குறித்தான ஷரத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27.05.1971 இல் தலைவர் கலைஞரிடம் அந்தக் குழுவினர் வழங்கினர்.

383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும்.

மத்திய-மாநில பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மகா சாசனமாக உள்ளது.

No comments: