Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (67)

1856 இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816 - ஆம் ஆண்டு 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லீஸ்.
          
எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

சென்னை அரசாங்கத்தில், வருவாய் வாரியச் செயலாளர், நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்தவர். தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கசாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர் எல்லீஸ்.


No comments: