Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (44)

தீண்டாமை ஒழிப்புக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் பணியாற்றிய லாகூரைச் சேர்ந்த ஜாத் பத் தோரக் மண்டல் என்னும் அமைப்பின் மாநாட்டில்(1936) உரையாற்ற அண்ணல் அம்பேத்கரை அழைத்தனர். அம்பேத்கர் தாம் ஆற்றவிருக்கும் உரையினைக் கட்டுரை வடிவில் (சாதியினை ஒழிக்கும் வழி) எழுதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

அக்கட்டுரையில் இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதியிருந்ததால், அந்த அமைப்பினர் அந்த மாநாட்டையே கூட்டாமல் விட்டுவிட்டனர்.

அடுத்த ஆண்டே தந்தை பெரியாரின் முயற்சியால் இவ்வுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு குடி அரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. சாதியை ஒழிக்கும் வழி (A.O.C) என்னும் பெயரால் நூல் ஒன்று 0.4.0 அணாவுக்கு விற்கப்பட்டது.

No comments: