Saturday, March 09, 2019

#பெரியார் யார் ?

#பெரியார் யார் ?

ஒரு முறை நம்ம ஜிடி நாயுடு மத்திய அரசிற்கு எதிரா ஒரு மாபெரும் கூட்டம் கூட்டினார்,  அதில் அகில இந்திய தலைவர்கள் தாெழிலதிபர்கள் விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் சிறப்பு விருந்தினராக அய்யா பெரியார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.  மத்திய அரசாங்கம் திரு ஜி டி நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் தரவில்லை என்றும், வருமான வரிச்சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுப்பதை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து அதற்கு எதிர் வினையாக தனது கண்டுபிடிப்புகளை மேடையிலேயே சம்மட்டி கொண்டு அடித்து உடைப்பது என்றும்  முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பேசிய அனைவரும் இக்கருத்தை வலியுறுத்தி  நாயுடுவிற்கு ஆதரவான கருத்தையே பேசினார்கள்.

அய்யா பெரியாரும் இதே கருத்தைத் தான் பேசுவார், இருந்தாலும் நாயுடுவிற்கு சிறு அய்யம் !  அய்யா எதாவது மாற்றி சொல்லி விட்டால் என்ன செய்வது,  மக்களும் அய்யா சொல்வதைத் தான் கேட்பார்கள்,  என்பதால் இப்போது  அய்யா பெரியார் அவர்கள் உரை யாற்றுவார்கள் என்று சாெல்லிவிட்டு தான் கண்டுபிடித்த காரை தானே உடைக்க ஆரம்பித்தார்.

பேச எழுந்த அய்யா அவர்கள் நாயுடுவின் செயலை கடுமையாக கண்டித்தார் !  என் தலைமையில் நிகழ்ச்சி அறிவித்து விட்டுஎன் அனுமதி இல்லாமல் காரை எப்படி உடைக்கலாம் நிறுத்துங்கள் என்னு சத்தம்போடுகிறார் அய்யா ..!அதோடு திரு நாயடுவின் செயலை முட்டாள் தனம் என்றும் கூறினார்.  உடனே அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற  தலைவர்கள் அனைவரும் அய்யாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாபஸ் வாங்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள்..!!

அய்யா அவர்கள் தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன் ஜிடி நாயடுவின் செயலை வரவேற்பது அப்பட்டமான மூடத்தனம் என்றும் பேசினார்.  அனைத்து தலைவர்களும் வாயடைத்து போயினர் !  தான் கொண்ட கருத்தை எவர் தடுத்தாலும் யாருக்காகவும் பின் வாங்காத சமரசம் செய்து கொள்ளாத ஒரே ஆளுமை அய்யா பெரியார் என்றால் அது மிகையாகாது ..!!

பிறகு அய்யா அவர்கள், ஒரு அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய நீங்கள் உடைக்க வேண்டியது உயிரற்ற பாெருளையல்ல,  அதுவும் இது நீங்கள் உங்கள் செலவில் தயாரித்த ஒரு பொருள் இதை  உடைப்பதில் நட்டம் உங்களுக்குத் தானே தவிர அரசாங்கத்திற்கு என்ன நட்டம்?

உங்கள் சம்மட்டி மத்திய அரசாங்கத்தை எதிர்த்தல்லவா வீசி இருக்க வேண்டும் ! அக்ரஹாரத்திற்கு எதிராக அல்லவா வீசியிருக்க வேண்டும் என்று பேசி  கைதட்டல் வாங்கியதுடன் மத்திய பார்ப்பனீய அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் பெரியார் !!

அந்த அய்யா பெரியார் அவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த மோடி  அரசு என்ன பாடு பட்டிருக்குமோ !!

Really We miss you KIZHAVA...

வாழ்க பெரியார் !
வளர்க பகுத்தறிவு!!

♥ அன்புடன்
பி என் எம் பெரியசாமி

No comments: