Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (42)

திராவிட நாடு கோரிக்கைக்காக ஆதரவு பெற பெரியார் 1940ஆம் ஆண்டு ஜின்னாவைச் சந்திப்பதற்காக சென்னை சென்றார்.

ஜனவரி 6 அன்று தாராவியில் தமிழ்க்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அடுத்தநாள் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பார்ப்பனியத்தை ஒழிப்பதில் தாமும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்வதாகவும், அன்று முதல் இன்று வரை பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடியும், பார்ப்பனியத்தை அறைகூவி அழைத்து வருபவருமான ஒப்பற்ற தலைவர் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கத் தமக்குக் கிடைத்த பாக்கியமே தமது வாழ்க்கையில் தாம் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாகவும் அம்பேத்கர் குறிப்பிட்டார். அம்பேத்கரின் பேச்சைத் தமிழர்களுக்காக அறிஞர் அண்ணா தமிழில் மொழி பெயர்த்தார். பம்பாயிலுள்ள தலைவர்களுக்காகப் பெரியாரின் பேச்சை அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

    பெரியார் பேசும்போது ”நான் பார்ப்பன ஆதிக்கத்தை முற்றிலும் வெறுக்கிறேன். அது மக்களின் மாபெரும் உணர்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவர்களையும் மதம், பொருளாதாரம், சமூகம், அரசியல், கடவுள் பெயரால் அழுத்தி வைத்திருக்கின்றது” என்றார்.

No comments: