Saturday, March 09, 2019

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றுமொரு சிவசேனா - முரண்களின் மொத்த தொகுப்பு

ஒரே தமிழன் சீமான்: சாதி, மதம் கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்றுபடனும்
மக்கள்: அப்புறம் ,
ஒ.த.சீமான்: தமிழர்கள், நாங்கள் வீரசைவர்கள். முருகனுக்கு பால்காவடி எடுப்பது , தைப்பூச திருவிழா என்பது தமிழர் பெருவிழா. (பாஜகவின் பெரும்பான்மைவாத அரசியல்)
-------
ஒ.த.சீமான்: சாதி பார்த்து ஓட்டு போட்டா உன் ஓட்டு எனக்கு தீட்டு
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: கருணாநிதி, எம்ஜிஆர் தன் சாதியை சொல்லி ஒரு வார்டு கவுன்சிலர் ஆகிருக்கமுடியுமா.
(தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்க சாதிகளில் முதல்வர் எவரும் வரவில்லை ஆகையால் சாதிவெறியர்கள் என் பின்னால் அணி திரளுங்கள்)
ரஜினி என்ன ஆளுகனு கேட்டா இந்த மண்ணுல ஆளனும்னு ஆசை வருமா? (கமல் வைணவ ஐய்யங்கார் பச்சை தமிழர் )
-----
ஒ.த.சீமான்: இது தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீயின் அன்புதம்பி: மன வேட்பாளரு அண்ணகாரு கலைக்கோட்டுதயம்(தட் பாஜகக்கு இஸ்லாமியன் ஓட்டு மட்டும் வேனும் மொமன்ட்)
---
ஒ.த.சீமான்: பாஜகவோட எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் ( ஆம் , வைக்கமாட்டார்கள். சிவசேனாவுடைய மறுவடிவம். சுயேட்சையாக உருவெடுப்பார்கள்)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உனக்கு பிள்ளையார் னா எனக்கு முருகன், உனக்கு வடநாட்டு சிவன்னா எனக்கு தென்னாட்டு சிவன், உனக்கு விநாயக சதூர்த்தி னா எனக்கு தைப்பூசம்
(இதிலிருந்து கூற வருவது என்னவென்றால் RSS ன் பாசிச கொள்கையின் தமிழ் Version நாங்கள் தான். பெரும்பான்மைவாதத்தை உணராத மதநல்லிணக்கத்துடன் இருக்கும் தமிழ் மக்களிடம், நம்ம கொள்கை தான் பெரும்பான்மை.
தமிழ் மொழி பேசுபவர்கள் இந்த இறை கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். பிரச்சாரம் செய்வது வேறு, ஆனால் இவர்கள் செய்வது பச்சையாக RSSன் தாய்மதம் திரும்பும் கொள்கையின் தமிழ் Version)
----
ஒ.த.சீமான்: இஸ்லாமியர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (இதை சீமான் தான் முதலில் சொன்னதாக பெருமையடிப்பவர்கள், காயிதே மில்லத்தையும் பழநிபாபாவின் பேரை கூட அறியாத சிறுவர்கள். And Moreover வெளிநாட்டு பண உதவியும், consolidated muslim votes பெறுவதற்காக பேசக்கூடிய பேச்சு)
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை. அவங்கள எப்படி "நான்" தமிழனா ஏத்துக்குறது [இஸ்லாமியர்கள் அரசு பணியிடங்கள், கல்லூரிகள், பள்ளிகூடங்கள் என எல்லா இடத்திலும் தோற்றத்தால் பொதுபுத்தி பார்வையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
எனக்கே கோவையில் ஒருத்தனும் அறை கொடுக்கல என் பெயரை கேட்டுட்டு, என் பெயரை சொல்லாம என் நண்பனோட தங்கி பிறகு என் பெயரை கேட்டதும் ஓனரு அதிர்ச்சியே அடைந்தாரு.
இப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் சென்று உருது தமிழ் மலையாளம்னு பிரிச்சு அரசியல் பன்னுவது, ஒடுக்கப்பட்டவர்களை பிரித்து ஆளுக்கொருத்தன் அடிச்சிட்டு போங்கடா என்பதாகும். RSSன் பிரித்து அடி சித்தாந்தம் தான்.
அதிலும் சீமான் ஏதோ தமிழ்நாட்டின் அதிபர் போல நான் ஏற்கமுடியாது என்று சொல்வது, ஒரு பிரிவை இயல்பாக ஏற்படுத்தும் என்றாலும், தமிழர் யார் என அடையாளப்படுத்தும் அதிகாரம் அவரிடம் இருப்பது போல தன் சகாக்களை நம்பவைக்கிறார்]
---
ஒ.த.சீமான்: ஆதிதமிழர் விடுதலை இல்லையேல் மீதி தமிழர் விடுதலை இல்லை
மக்கள் : அப்புறம்
ஒ.த.சீமான்: தெலுங்கு பேசும் அருந்ததியர்களை, அவர்களாகவே நாங்கள் ஏற்கிறோம். அவர்களின் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் நாங்கள் உழைப்போம். [இருப்பதிலே கடைசிநிலை ஒடுக்குமுறைக்கு ஆளாவது அருந்ததியர்கள் தான். வழிவழியாக நாம் பார்க்கவே கூச்சப்படும் மலத்தை தன் கையால் அள்ளி விஷவாயு தாக்கி இறந்தும் போகிறார்கள்.
அவர்களை ஏற்கனவே மனிதர்களாகவே பார்க்காமல் இருக்கிறார்கள் இதில் அவர்களை மொழி ரீதியாக சாதி ரீதியாக இரண்டாம்பட்சமாக பார்க்கும் இன்னொரு பார்வையை வளர்க்கிறார்.
இப்போது தான் ஒடுக்கப்பட்டவர்களான பறையர்களும் அருந்ததியர்களும் ஒன்றாக ஒருமித்த குரலில் போராடி கொண்டிருக்கும் வேளையில், இப்படியான முனுமுனுப்புகள் வர்ணாசிரமத்திற்கே இழுத்து செல்லும்]
---
ஒ.த.சீமான்: இது ஆரியருக்கும் தமிழருக்கும் நடக்கும் போர். திராவிடர்கள் அமைதியாக இருக்கவும்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: திருச்சி சங்கரப்பா சொன்னாரு. அவரு ஒரு சுத்த தமிழ் ஐயர். மகாபாரதம் தமிழர்களுடைய போர்னு. தமிழ் பார்ப்பனர்களும் தமிழர் தான் [ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல சூத்திரன் என்றும் கீழ்சாதி என்றும் பார்த்தவர்கள் தமிழர்கள் ஆக்கிவிட்டு எந்த ஆரியர் கூட போர் புரிய போகிறார். இவர் பார்வையில் சூனா சாமி கூட தமிழர் தான். RSSன் தமிழ் Version. அவா இல்லாம RSS இயங்குமோ னா :) ]
---
ஒ.த.சீமான்: பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். பிரபாகரன் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
மக்கள்: அப்புறம்
ஒ.த.சீமான்: நான் வர்ரவரைக்கும் பிரபாகரன் தீவிரவாதியா தான் தெரிந்தார்[ வரலாறு அறியாத சிறுபிள்ளைகள் வேண்டுமானால் இந்த கதைக்கு கைதட்டுவார்கள். ராமதாஸ், பழநிபாபா, கொளத்தூர் மணி, வைகோ என பல தலைவர்கள் பிரபாகரன் Active ஆக இருக்கும்போதே அவர்களுக்காக பேசி உதவி செய்து தடா, பொடா வாங்கியவர்கள்.
எம்ஜிஆரின் பண உதவி சொல்லும், விடுதலை புலிகளை தமிழக மக்கள் எப்படி நேசித்தார்கள் என்பதை. விடுதலை புலிகள் ஈழத்தில் செயலற்ற பிறகு பிரபாகரனை தீவிரவாதியிலிருந்து "புனிதப்படுத்தியது " போல் பேசுவது என்பது அவர் சகாக்கள் வேண்டுமானால் நம்பலாம்.]
--
இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். முரண்பாட்டின், குழப்பங்களின் மொத்த உருவமாக. உயிர்நேயம் மிக்க தமிழ் மக்களை , இனவெறி மிக்க சிங்களர்களாக மாற்ற தான் இவ்வளவு பாடுபடுகிறார் போலும்.
தமிழ்தேசியம் என்ற அழகான மண்ணுக்கான அரசியலை , இனவெறியுடன் குழப்பி, அதனுள் சாதிவெறியையும் மதவெறியையும் உட்கூறாக திணிப்பதில் இருந்தே தெரிகிறது. மூன்று வெறிகளும் ஓன்றாக சேரும் இடத்தில், எளிய மக்களின் உயிர் பலிகள் அதிகமாக இருக்கும் என்று.
அது அவர் சகாக்களின் உதிரும் வார்த்தைகளிலேயே தெரியும், அவர்கள் எவ்வளவு சகிப்புதன்மையற்றவர்கள் என்று. இவர்கள் வளர்ப்பது தமிழ்தேசியம் அல்ல, Neo fascism..
-விக்டர் இறைதாசன்

No comments: